ஒட்டன்சத்திரத்தில் மாட்டு சந்தை மார்ச் 29ல் நடக்கிறது

ஒட்டன்சத்திரம், மார்ச் 27: ஒட்டன்சத்திரம் நாகனம்பட்டி சாலையில் கே.கே நகரில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று மாட்டு சந்தை நடைபெறும். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கால்நடை வளர்ப்போர், வியாபாரிகள் மாடுகள் விற்க, வாங்க வருவர். இந்நிலையில் வரும் மார்ச் 31ம் தேதி திங்கட்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மார்ச் 29ம் தேதி சனிக்கிழமை மாட்டு சந்தை நடைபெறும் என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கால்நடை வளர்ப்போர், வியாபாரிகள் சனிக்கிழமை நடைபெறும் மாட்டு சந்தையில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஒட்டன்சத்திரத்தில் மாட்டு சந்தை மார்ச் 29ல் நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: