சென்னை: மார்ச் 29ம் தேதி அனைத்து நியாய விலைக் கடைகளும் வழக்கம்போல செயல்படும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்; பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி, அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக மாதத்தின் கடைசிப் பணி நாளன்று ஒத்திசைவுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுவதில்லை.
இம்மாதத்தின் கடைசிப் பணிநாளான மார்ச் 29ம் தேதி சனிக்கிழமையாக அமைகிறது. மேலும், அதனைத் தொடர்ந்து வரும் மார்ச் 30ம் தேதி தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் மார்ச் 31ம் தேதி ரம்ஜான் பண்டிகையினை முன்னிட்டு அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் விடுமுறை நாட்களாகும். எனவே இம்மாதத்தின் கடைசி இரண்டு நாட்கள் நியாய விலைக் கடைகளுக்குப் பொது விடுமுறை தினங்களாக வருவதால், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி வருகின்ற மார்ச் 29ம் தேதி அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்பட்டு, வழக்கம் போல் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.
குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை மார்ச் 30ம் தேதியும் நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மார்ச் 29ம் தேதி அனைத்து நியாய விலைக் கடைகளும் வழக்கம்போல செயல்படும் என அறிவிப்பு appeared first on Dinakaran.