சென்னை: தமிழ்நாடு தொழில் வளர்ச்சி சார்பில் சேலம் மாவட்டம் அரியகவுண்டம்பட்டியில் 133 கோடி மதிப்பீட்டில் வெள்ளி கொலுசு உற்பத்தி வளாகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் பட்டுவளர்ச்சித் துறையின் சார்பில் சிறந்த பட்டு நூற்பாளர்களுக்கு பரிசுத்தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பரிசுத்தொகையாக 8 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பள்ளிக் கல்வித் துறை சார்பில் தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதித் திட்ட நூல் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் .
The post சென்னை தலைமை செயலகத்தில் பல்வேறுதுறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.