கிணற்றுக்கு தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை

ராசிபுரம், மார்ச் 25: வெண்ணந்தூர் அருகே உள்ள தச்சங்காடு பகுதியில் இருந்து, கோம்பைகாடு செல்லும் சாலையோரத்தில், திறந்தவெளி கிணறு உள்ளது. இவ்வழியாக, பள்ளி, கல்லூரி வாகனங்கள், கனரக, இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த திறந்தவெளி கிணறு, சாலையின் வளைவில் அமைந்துள்ளதால், இரவு நேரங்களில் வாகனங்கள் சிறிது தடுமாறினால் கிணற்றில் விழும் நிலை உள்ளது. இதனால், எந்நேரமும் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் அப்பகுதியை, கடந்து சென்று வருகின்றனர். அபாய கிணற்றால் பெரும் விபத்து ஏற்படும் முன், கிணற்றுக்கு தடுப்பு சுவரை உயர்த்தி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கிணற்றுக்கு தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: