இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்- சைந்தவி விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்: வழக்கு ஒத்திவைப்பு!!

சென்னை: இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், பாடகி சைந்தவி பரஸ்பரம் பிரிவதாக விவகாரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வளம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் . இவர் கடந்த 2013ம் ஆண்டு தனது பள்ளித் தோழியும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த 12 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொள்ள போவதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர்.

இந்நிலையில், இருவரும் பிரிவதாக அறிவித்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரம் விவாகரத்து கோரி இன்று மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி முன் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி இருவரும் நேரில் ஆஜராகி, இருவரும் மனமுவந்து பிரிவதாக தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கு விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்ட பின் இருவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றனர்.

The post இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்- சைந்தவி விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்: வழக்கு ஒத்திவைப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: