மாநிலங்களுக்கு செய்யப்படும் அநீதி இது. இதை உணர்ந்து, பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதற்கான கூட்டம் தற்போது கூட்டப்பட்டுள்ளது. சிறப்பான முன்னெடுப்பை மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 20. 26 மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறை செய்தால் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக்கப்படும். தொகுதிகள் சீரமைக்கப்பட்டால், மக்களவை – சட்டப்பேரவை தொகுதிகளை ஒடிசா இழக்கும். மக்கள் தொகை அடிப்படையில் மட்டும் தொகுதி மறுவரையறை செய்யக் கூடாது. அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைந்து ஆலோசித்த பிறகே ஒன்றிய அரசு தொகுதி மறுசீரமைப்பை நடத்த வேண்டும். ஒடிசா மக்களின் நலன் காக்க பிஜு ஜனதாதளம் போராடும்”, இவ்வாறு தெரிவித்தார்.
The post மக்கள் தொகை அடிப்படையில் மட்டும் தொகுதி மறுவரையறை செய்யக் கூடாது: ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் உரை appeared first on Dinakaran.