இவர்களின் காவல் நேற்று நிறைவடைந்ததை தொடர்ந்து தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மீனவர்கள் 14 பேருக்கும், இலங்கை மதிப்பில் தலா ரூ.4.50 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மொத்த அபராதம் இந்திய மதிப்பில் ரூ.18 லட்சம் ஆகும். மேலும் மீனவர்களின் விசைப்படகு நாட்டுடமையாக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது. அபராத தொகை கட்டிய பின் விடுதலை செய்யப்படுவார்கள் என யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post பாம்பன் மீனவர்களுக்கு ரூ.18 லட்சம் அபராதம்: இலங்கை நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.