தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, கன்னியாகுமரி, தென்காசி, ஈரோடு மாவட்டங்களில் நாளை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.