ஆகவே விநியோகஸ்தர்கள் எப்போதும் போல சேவையைத் தொடர்வார்கள். தற்போதைய வாகன போக்குவரத்து ஒப்பந்தப்புள்ளி அனைத்து மண்டலங்களில் உள்ள டிரான்ஸ்போர்ட்டர்களுடன் விரிவாக கலந்து பேசி முடிவு செய்யப்பட்டது. இதில் அவர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்தனர். முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பல விளக்கங்கள் வழங்கப்பட்டன. ஓஎம்சி-க்கள் பிரதான டிரான்ஸ்போர்ட்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தீர்வு காண முயன்று வருகின்றனர்.
பொறுப்புள்ள பொதுத்துறை ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்களாக நாங்கள் அனைத்து நுகர்வோர்களின் வீட்டு உபயோக மற்றும் வர்த்தக எல்பிசி தேவையை தடையின்றி அளிப்பதில் முனைப்புடன் உள்ளோம். வாடிக்கையாளர்கள் இதுகுறித்து பதற்றம் அடையவேண்டாம். ஏனெனில், தடையற்ற எல்பிசி சப்ளையை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post எண்ணெய் நிறுவனங்கள் தகவல் ஸ்டிரைக்கால் சிலிண்டர் விநியோகம் பாதிக்காது appeared first on Dinakaran.