தனி பிரவுசர் உருவாக்கும் போது நமது நாட்டின் தரவு பாதுகாப்பு சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்கும் என்பதால் பயனர்களின் தகவல்கள், பாதுகாப்பு உறுதி செய்யப்படும். மேலும் நமது மக்களின் தகவல்கள் நமது நாட்டிலேயே இருக்கும். புதிய பிரவுசர் ஐஓஎஸ், விண்டோஸ், ஆண்ட்ராய்ட் ஆகியவற்றுடன் செயல்படும். இந்தியாவின் கவனத்தை சேவையில் இருந்து தயாரிப்புகளுக்கு விரிவுபடுத்துவதில் இது ஒரு பெரிய முயற்சி. ஏனெனில் ரூ.24 லட்சம் கோடி வருவாய் ஈட்டும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கவனம் இதுவரை சேவைகளில் இருந்தது. இப்போது, இந்திய அரசு ஸ்டார்ட்-அப்கள், கல்வி நிறுவனங்களை மென்பொருள் தயாரிப்புகளை உருவாக்க ஊக்குவிக்கிறது. இந்தியாவை ஒரு தயாரிப்பு நாடாக உருவாக்குவதே குறிக்கோள். இது மென்பொருள் மற்றும் வன்பொருள் உற்பத்தியை உள்ளடக்கியதாக இருக்கும். இவ்வாறு பேசினார்.
The post ரூ.24 லட்சம் கோடி வருவாய் ஈட்டும் ஐடி துறை இந்தியாவுக்கு தனி பிரவுசர் உருவாக்கப்படும்: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.