எனவே, மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள், தத்தமது பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களிலும் – பொது இடங்களிலும் வைத்துள்ள திமுக கொடிக் கம்பங்களை ‘மதுரை உயர் நீதிமன்ற கிளை அளித்த தீர்ப்பினை ஏற்று, தாங்களே முன்வந்து 15 நாட்களுக்குள் அகற்றிட வேண்டுமெனவும், அவ்வாறு அகற்றப்பட்ட திமுக கொடிக் கம்பங்களின் விவரங்களை தலைமைக் கழகத்திற்கு தெரியப்படுத்திட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.
The post உயர் நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பை ஏற்று பொது இடங்களில் வைத்துள்ள திமுக கொடி கம்பங்களை அகற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு துரைமுருகன் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.
