‘வஞ்சிக்காதே வஞ்சிக்காதே; தென் மாநிலங்களை வஞ்சிக்காதே’ என்றும், ‘மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளைக் குறைக்காதே’ என்றும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி மக்களவையில் பேசுகையில், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை தமிழகத்தை போன்ற தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை வெகுவாகக் குறைக்கும் அபாயத்தை உருவாக்குகிறது’ என்றார்.
The post தொகுதி மறுவரையறை விவகாரம்: திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.