விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி காலமானதை அடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவா போட்டியிட்டார். தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் அன்னியூர் சிவா, 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து, திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவின் வெற்றியை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அன்னியூர் சிவா மனுத்தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, ஜி.கே.இளந்திரையன், அன்னியூர் சிவாவின் மனுவை ஏற்று அவருக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

The post விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: