வேலூர், மார்ச் 18: வேலூர் எஸ்பி அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் ஆலோசனை நடத்தினார். அப்போது புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். வேலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று மாலை வடக்கு மண்டல ஐஜிஅஸ்ரா கார்க் தலைமையில் குற்றத் தடுப்பு குறித்த காவல்துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வேலூர் சரக டிஐஜி தேவராணி, எஸ்பி மதிவாணன், ஏடிஎஸ்பிகள் பாஸ்கரன், அண்ணாதுரை, அனைத்து டிஎஸ்பிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஐஜி அஸ்ரா கார்க் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்த வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக வரும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும். பழைய குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளையும் விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து அறிவுரை வழங்கினார்.
The post வேலூர் எஸ்பி அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் வடக்கு மண்டல ஐஜி ஆலோசனை appeared first on Dinakaran.