அம்பை: நெல்லை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த 11, 12ம் தேதிகளில் பெய்த கனமழையால் அம்பை வனச்சரகத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டது. தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகமாக இருந்ததால் நேற்று முன்தினம் 3வது நாளாக மணிமுத்தாறு அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.
தற்போது முற்றிலுமாக மழை நின்றுவிட்டதால் நேற்று முன்தினம் இரவு முதல் அருவிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் மணிமுத்தாறு அருவிக்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு நேற்று முதல் வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இன்று விடுமுறை தினம் என்பதால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என தெரிகிறது.
The post மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.