தலைமறைவாக இருந்த ரவுடி கைது

சேலம், மார்ச்.15: சேலம் கிச்சிப்பாளையம் நாராயணநகரை சேர்ந்தவர் மணி(எ)பல்லுமணி(எ) குணசீலன் (30). பிரபல ரடிவுயான மீது கொலை முயற்சி உள்பட 3 வழக்குகள் உள்ளது. இவ்வழக்கு களில் கடந்த 6 மாதமாக அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இவரை கைது செய்ய நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்த நிலையில், இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் கோவை சூழூர் பகுதியில் பதுங்கியிருந்த பல்லுமணியை கைது செய்தனர். பின்னர் அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post தலைமறைவாக இருந்த ரவுடி கைது appeared first on Dinakaran.

Related Stories: