ரூ.884 கோடி சுரங்க முறைகேட்டில் பறிமுதல் 53 கிலோ தங்கம் ஒப்படைக்க கோரிய கர்நாடக மாஜி அமைச்சர் மனு நிராகரிப்பு: தெலங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு

திருமலை: சுரங்க முறைகேட்டு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 53 கிலோ தங்க நகைகளை கேட்டு மாஜி அமைச்சர் தாக்கல் செய்த மனுவை நிராகரித்து தெலங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆந்திரா- கர்நாடகா மாநிலங்களின் எல்லையில் உள்ள ஓபுலாபுரத்தில் சட்டவிரோத சுரங்க முறைகேட்டில், ரூ.884 கோடி கொள்ளையடிக்கப்பட்டதாக கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்தன் ரெட்டி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் தனது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட 53 கிலோ தங்க நகைகள் நாசமடைந்து விடுமோ என்று முன்னாள் அமைச்சர் ஜனார்தன் ரெட்டி, அவரது மகள் பிரமணி, மகன் கிரிதி ரெட்டி ஆகியோர் தங்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், பணம் மற்றும் பத்திரங்களை விடுவிக்கக்கோரி தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது சிபிஐ விசாரணை முடிந்த பின்னரே வழக்கின் உரிமைகள் குறித்து முடிவு செய்யப்பட வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.

The post ரூ.884 கோடி சுரங்க முறைகேட்டில் பறிமுதல் 53 கிலோ தங்கம் ஒப்படைக்க கோரிய கர்நாடக மாஜி அமைச்சர் மனு நிராகரிப்பு: தெலங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: