சட்டத்துறையின் முன்னாள் அமைச்சர் என்ற முறையில் சிவி சண்முகம் கவனமாக பேச வேண்டும்: ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை: முதலமைச்சர் பற்றி அவதூறு பேசியதற்காக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டது. பல்வேறு நிகழ்வுகளில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் குறித்து பேசியதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி. சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது நடந்த வாதங்கள் பின்வருமாறு..

சி.வி. சண்முகம் தரப்பு : எதிர்கட்சி என்ற அடிப்படையில் ஆளும் கட்சியை விமர்சிக்க உரிமை உள்ளது. அதன் அடிப்படையிலேயே சி.வி.சண்முகம் பேசினார். ஆனால் அரசியல் பழிவாங்கும் வகையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறை : நீதிமன்றம் பலமுறை எச்சரித்தும் விமர்சனம் என்ற பெயரில் மோசமான வார்த்தைகளை சி.வி. சண்முகம் பயன்படுகிறார்.

நீதிபதி : சட்டத்துறையின் முன்னாள் அமைச்சர் என்ற முறையில் சிவி சண்முகம் கவனமாக பேச வேண்டும். எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் ஆளும் கட்சியை விமர்சிக்கலாம் என்றாலும் உருவக்கேலி உள்ளிட்டவை கூடாது. ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். பொதுவெளியில் பேசும் போது வரைமுறையுடன் பேச வேண்டும். சி.வி. சண்முகம் மீதான வழக்குகளை ரத்து செய்கிறோம். இது தொடர்பாக விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும். எதிர்காலத்தில் சிவி சண்முகம் இவ்வாறு பேசாத வகையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். மீண்டும் அதனை மீறினால் வழக்கை சந்தித்து தான் ஆக வேண்டுமெனவும் கூறினார்.

The post சட்டத்துறையின் முன்னாள் அமைச்சர் என்ற முறையில் சிவி சண்முகம் கவனமாக பேச வேண்டும்: ஐகோர்ட் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: