முதல்வர் தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும், முதல்வர் மருந்தகம் என்ற சிறப்பான திட்டம், உயிர் காக்கும் உன்னத திட்டமாகும். எனவே தேவையான மருந்து, மாத்திரைகளை இருப்பு வைத்து, பயனாளிகளுக்கு இருப்பு இல்லை என திருப்பி அனுப்பாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைகளை கேட்டறிந்து அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும். மருந்து கொள்முதல் பணிகள் தொய்வில்லாமல் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மடிப்பேடுகள் தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். மடிப்பேடுகளில் முதல்வர் மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் மருந்து வகைகள், தள்ளுபடி போன்றவை தெளிவாக இருக்கும் வண்ணம் அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
The post தேவையான மருந்து, மாத்திரை இருப்பு வைத்து முதல்வர் மருந்தக பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமைச்சர் பெரியகருப்பன் உத்தரவு appeared first on Dinakaran.
