அப்போது, அவரைப் பின்தொடர்ந்து வந்த கும்பல், அரிவாளால் வெட்டி அவரைக் கொன்றது. தெலங்கானாவை உலுக்கிய கவுரவக் கொலை வழக்கில், பெண்ணின் தந்தை மாருதி ராவ் கூலிப்படைக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்து கொலை செய்யத் தூண்டியது அம்பலமானது. இதையடுத்து, மாருதி ராவ் உட்பட 8 பேரைக் கைது செய்து போலீசார் சிறையில் அடைந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை மிரியாலகுடாவில் உள்ள வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே, ஜாமீனில் வெளிவந்த மாருதி ராவ் தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், ன கூலிப்படை தலைவன் சுபாஷ் குமார் என்பவருக்கு தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் உட்பட எஞ்சிய 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
The post சாதி ஆணவக் கொலை வழக்கில் கூலிப்படை தலைவனுக்கு தூக்கு: 6 பேருக்கு ஆயுள், தெலங்கானா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.
