தர்மேந்திர பிரதான் உடனே பதவி விலக வேண்டும்-கார்கே

டெல்லி: தமிழ்நாட்டு மக்களின் சுயமரியாதையை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என மாநிலங்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வலியுறுத்தியுள்ளார். நாட்டின் ஒரு மாநில மக்களை பண்பாடு இல்லாதவர்கள் என்று அவதூறாக பிரதான் பேசி உள்ளார். நாட்டு மக்களை பிளவுபடுத்துவது பற்றியும் நாட்டைத் துண்டாடுவது பற்றியும் பிரதான் பேசுவதாகவும் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

The post தர்மேந்திர பிரதான் உடனே பதவி விலக வேண்டும்-கார்கே appeared first on Dinakaran.

Related Stories: