அதில், ” ஏசி பேருந்து நீங்கலாக நகர மற்றும் புறநகர் பேருந்துகளில் சுய உதவிக்குழு பெண் பயணிகளுக்கு 25 கிலோ வரையிலான சுமைகளை 100 கி.மீ வரை கட்டணமில்லாமல் எடுத்து செல்ல “கட்டணமில்லா சுமை பயணச்சீட்டு” வழங்க வேண்டும். சுய உதவிக்குழுவினர் கொண்டுவரும் சுமைகளை பேருந்துகளில் ஏற்றி, இறக்குவதற்காக, போதுமான நேரத்தை வழங்கி பேருந்துகளை நிறுத்தி இயக்க வேண்டும். சுய உதவிக்குழு பெண் பயணிகளிடம் பேருந்து ஒட்டுநர் மற்றும் நடத்துனர்கள் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள், ஆட்சேபனைக்குரிய பொருட்கள், பேருந்தில் மற்ற பயணிகளுக்கு இடையூறாக உள்ள பொருட்களை கொண்டு செல்லக் கூடாது,” என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post அரசுப் பேருந்துகளில் மகளிர் சுய உதவிக்குழுவினர் 25 கிலோ பொருட்களை கட்டணமின்றி கொண்டு செல்ல சலுகை : தமிழக போக்குவரத்துத் துறை appeared first on Dinakaran.
