வந்தவாசி, மார்ச் 11: வந்தவாசி அருகே ஆசைவார்த்தை கூறி நர்சிங் கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது நர்சிங் கல்லூரி மாணவி. இவருக்கு திடீரென உடலில் மாற்றம் ஏற்பட்டதால், இவரது தாயார் கடந்த மாதம் 9ம் தேதி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றார். அப்போது, மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வந்தவாசி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சப்- இன்ஸ்பெக்டர் சாந்தி போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில், கொடநல்லூர் கிராமத்தை சேர்ந்த மதியரசன்(19) என்பவர், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியுடன் உல்லாசமாக இருந்ததும், அதனால் மாணவி கர்ப்பமானதும் தெரியவந்தது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த மதியரசனை சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர், அவரை வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.
The post நர்சிங் மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது வந்தவாசி அருகே ஆசைவார்த்தை கூறி appeared first on Dinakaran.