அதிமுக கூட்டணிக்காக தவம் கிடக்கிறது என்று அண்ணாமலை சொல்லவில்லை: எடப்பாடி பழனிசாமி திடீர் பல்டி

சென்னை: அதிமுக கூட்டணிக்காக தவம் கிடக்கிறது என்று அண்ணாமலை சொன்னதாக தவறான தகவல் பரப்ப வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.சென்னை, அதிமுக தலைமை அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் எடப்பாடி பங்கேற்று விட்டு, புறப்பட்டு செல்லும்போது அவரை நிருபர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி எழுப்பினர்.

பாஜகவுடன் கூட்டணிக்காக தவம் கிடக்கிறார்கள் என்று அண்ணாமலை கூறி உள்ளாரே? எங்கேயாவது அதிமுக என்று குறிப்பிட்டு அவர் (அண்ணாமலை) பேசினாரா? தயவுசெய்து தவறாக பேசாதீர்கள். அதிமுக என்று எங்க, யார் சொன்னது? நீங்கள் போட்டு கொடுத்து வாங்காதிங்க. நான் ஏற்கனவே தெளிவாக சொல்லி விட்டேன். இன்னும் 6 மாதம் கழித்து கூட்டணி குறித்து பேசப்படும் என்று தெளிவாக கூறி விட்டேன். பத்திரிகைகளிலும் இது செய்தியாக வந்துள்ளது. அதுதான் செய்தி. இவ்வாறு அவர் கூறினார்.

The post அதிமுக கூட்டணிக்காக தவம் கிடக்கிறது என்று அண்ணாமலை சொல்லவில்லை: எடப்பாடி பழனிசாமி திடீர் பல்டி appeared first on Dinakaran.

Related Stories: