அடையாறு துணை கமிஷனராக பணியில் இருந்த போது, அடையாறில் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த வழக்கில் 5 குற்றவாளிகளை சுதாகர் தலைமையிலான குழுவினர் தான் என்கவுன்டர் செய்தனர். பின்னர் டிஐஜியாக பதவி உயர்வு பெற்ற அவர் சென்னை பெருநகர வடக்கு மண்டலம், கிழக்கு மண்டலம் மற்றும் இணை கமிஷனராவும், பிறகு சென்னை போக்குவரத்து தெற்கு மண்டல இணை கமிஷனராகவும் பணியாற்றினார்.
அதனை தொடர்ந்து ஐஜியாக பதவி உயர்வு பெற்ற அவர், மேற்கு மண்டல ஐஜியாக பணியாற்றினார். அதன் பிறகு சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனராக தற்போது பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஒன்றிய அரசு பணிக்கு சுதாகர் விண்ணப்பித்திருந்தார். அதற்கான அனுமதி ஒன்றிய அரசிடம் இருந்து வந்ததை தொடர்ந்து ஒன்றிய போதை பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவை ஒன்றிய அரசு பிறப்பித்துள்ளது.
The post ஒன்றிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குநராக ஐஜி சுதாகர் நியமனம் appeared first on Dinakaran.
