இந்திய ஆட்சிப் பணியில் 1984-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், ஒடிசா அரசிலும் இந்தியத் தேர்தல் ஆணையத்திலும் 34 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியவர். ஒடிசா மாநிலத்தின் நிதித்துறைச் செயலர், கூடுதல் தலைமைச் செயலாளர், வளர்ச்சி ஆணையர் போன்ற பொறுப்புகளை வகித்தவர். 2018-ல் பணிஓய்வு பெற்ற இவர் அதன்பிறகு முன்னாள் ஒடிசா மாநில முதல்வரின் தலைமை ஆலோசகராக 2024 வரையில் பொறுப்பு வகித்தார்.
திராவிட மொழிக்குடும்பத்தின் பரவல், சிந்து சமவெளிப் பண்பாடு, தொல்தமிழ்த் தொன்மங்கள், சங்க இலக்கியங்கள் மற்றும் திருக்குறள் குறித்த இவரது செயல்பாடும் பங்களிப்பும் உலகத்தமிழர்களால் பாராட்டப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணன் நியமனத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ள சு.வெங்கடேசன் எம்பி, “தனது ஆய்வுகளால் தொல் தமிழர் வரலாறு குறித்தும் பண்பாடு குறித்தும் பல உண்மைகளை வெளிக்கொணர்ந்த திரு. ஆர். பாலகிருஷ்ணன் அவர்கள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவரது அனுபவமும் அறிவும் தமிழ் மொழி குறித்த ஆய்வுகளுக்கு மேலும் வலுசேர்க்கும்.வைகையின் மைந்தனுக்கு வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
The post உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் நியமனம்: தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.
