மீண்டும் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என அங்காடி நிர்வாகம் தரப்பில் ஒலிபெருக்கி மூலமும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதை மீறி நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அங்காடி நிர்வாகம் மூலம் தொடர்ந்து ஒருவாரமாக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி வருகின்றனர். இதுவரை ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று அங்காடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The post ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் appeared first on Dinakaran.
