இதுபற்றிய புகாரின் அடிப்படையில், அரும்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சங்கர் (40) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஜாமீனில் வெளிய வந்த சங்கர் 2017 முதல் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். அவரை கைது செய்து ஆஜர்படுத்தவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் தேடிவந்தனர்.
இந்நிலையில், சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்தில் பதுங்கியிருந்த சங்கரை கடந்த இரு தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். பின்னர் அவரை நேற்றுமுன்தினம் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 8 ஆண்டாக டிமிக்கி கொடுத்த தலைமறைவு குற்றவாளி கைது appeared first on Dinakaran.
