பூங்கா நுழைவு வாயிலில் காளை சிலை ஒன்று பல ஆண்டுகளாக இருந்தது. அதன் பின்னணியில் திருமூர்த்தி அணை ரம்மியமாக காட்சியளிக்கும்.இதையடுத்து, சுற்றுலா பயணிகள் காளை சிலை முன்பு நின்று செல்பி, போட்டோ எடுத்து செல்வது வழக்கம். இந்நிலையில், திடீரென அந்த காளை சிலை மாயமாகி உள்ளது. சிலையை பொதுப்பணித்துறையினர் அகற்றியதாக தெரிகிறது. காளை சிலை இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மீண்டும் சிலையை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post திருமூர்த்தி பூங்காவில் காளை சிலை மாயம் appeared first on Dinakaran.
