உடனடியாக வீட்டில் இருந்த உறவினர்கள், பிரியங்காவை மீட்டு ஆலப்புழாவில் இருக்கும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எந்த வகையான பாம்பு கடித்தது என்பது தெரியவில்லை. மயக்க நிலையில் இருந்து மீண்ட பிரியங்கா, தற்போது நலமுடன் இருப்பதாகவும், தொடர்ந்து அவர் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து எம்பி ஜோஸ் கே.மணி கூறுகையில், ‘எனது மகள் தற்போது நலமாக இருக்கிறார். எனது மகளின் உடல்நலத்திற்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி ெதரிவித்துக் கொள்கிறேன். இன்று பிரியங்கா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்’ என்று தெரிவித்தார்.
The post கேரள எம்பியின் மகளை பாம்பு கடித்தது: மருத்துவமனையில் அட்மிட் appeared first on Dinakaran.
