நகை அடகு கடையில் புகுந்த பாம்பு கண்ணமங்கலத்தில்

கண்ணமங்கலம், பிப். 20: கண்ணமங்கலத்தில் உள்ள நகை அடகு கடையில் நேற்று பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கண்ணமங்கலம் செம்படவர் தெருவில் தனியார் நகை அடகு கடை உள்ளது. நேற்று காலை அதன் உரிமையாளர் கடையில் அமர்ந்திருந்த போது, பாம்பு உள்ளே நுழைந்தது. இதனை பார்த்த கடையின் உரிமையாளர் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தார். பின்னர், கண்ணமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு கடையில் பாம்பு இருப்பதாக தகவல் தெரிவித்தார். அதன்பேரில் கூடையில் பதுங்கியிருந்த பாம்பை பாதுகாப்பாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். கடையின் எதிரில் கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதிலிருந்து பாம்பு வந்திருக்கலாம் என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

The post நகை அடகு கடையில் புகுந்த பாம்பு கண்ணமங்கலத்தில் appeared first on Dinakaran.

Related Stories: