₹9.45 லட்சத்திற்கு எள், பருத்தி விற்பனை

திருச்செங்கோடு, பிப்.19: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாராந்திர பருத்தி விற்பனை, ரகசிய டெண்டர் முறையில் நடந்தது. 65 மூட்டை பருத்தி ₹1.15 லட்சத்திற்கு விற்பனையானது. பருத்தியை முசிறி, புதுப்பட்டி, வடக்கு நல்லியம்பட்டி, தெற்கு நல்லியம்பட்டி, தண்டலை, திருத்தலையூர், சேங்கணம், ராசிபுரம், கதிராநல்லூர், புதுச்சத்திரம், துறையூர், அம்மம்பாளையம், மருவத்தூர் போன்ற பகுதிகளிலிருந்து விவசாயிகள் கொண்டு வந்தனர். பிடி காட்டன் குவிண்டால் ₹5499 முதல் ₹8000 வரை விற்பனையானது. இதே போல், 83 மூட்டை எள் ₹8.30 லட்சத்திற்கு விற்பனையானது. கருப்பு எள் கிலோ ₹124.20 முதல் ₹207.50 வரையிலும், சிவப்பு எள் ₹115.40 முதல் ₹142.60 வரையிலும், வெள்ளை எள் ₹114 வரையிலும் விற்பனையானது.

The post ₹9.45 லட்சத்திற்கு எள், பருத்தி விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: