புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம்: உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் முறையீடு

டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் முறையீடு செய்தார். தேர்தல் ஆணையர் நியமன சட்டத்துக்கு எதிரான வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை ஒன்றிய அரசு நியமித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் ஞானேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த நியமனத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும் வகையில் புதிய தலைமை தேர்தல் ஆணையரை நியமித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை மீறும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுகிறது. ஒன்றிய அரசின் இச்செயல் உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளை மீறும் வகையில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். தலைமை தேர்தல் ஆணையர் தேர்வு தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்துக்கு எதிரான வழக்கு, நாளை விசாரணை பட்டியலில் 41 ஆக உள்ளது. விசாரணை வரிசையில் 41-வது வழக்காக உள்ள வழக்கை முதல் வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

The post புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம்: உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் முறையீடு appeared first on Dinakaran.

Related Stories: