டெல்லி : மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தொடர்பான புதிய மனுக்களை விசாரணைக்கு ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தொடர்பாக ஏராளமான மனுக்கள் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இச்சட்டம் தொடர்பாக இனிமேலும் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டாம். புதிய மனுக்களை இனி விசாரணைக்கு ஏற்க முடியாது”என்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் அமர்வு தெரிவித்துள்ளது.
The post மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தொடர்பான புதிய மனுக்களை ஏற்க முடியாது : உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.