இதில் சரத்குமார் மீது கொலை முயற்சி உட்பட 8 வழக்குகள் நிலுவையில் இருப்பதும், சேரமான் மீது கொலை முயற்சி, வழிப்பறி என 14 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில், ஒட்டேரி பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் மெடிக்கல் ஷாப் நடத்திய வரும் மகேஷ் (35) மருத்துவர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் அதிக லாபத்திற்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்தது தெரியவந்தது.
அந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த கொளத்தூர் அம்பேத்கர் நகர் 2வது ெதருவை சேர்ந்த முகமது சாதிக் (30) ஆகியோர் இதற்கு உதவியது தெரியவந்தது. அதை தொடார்ந்து போலீசார் மெடிக்கல் ஷாப் உரிமையாளர் மகேஷ் மற்றும் முகமது சாதிக் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர் அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சா மற்றும் 150 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
The post போதை மாத்திரை, கஞ்சா விற்ற மெடிக்கல் ஷாப் உரிமையாளர் ரவுடிகள் உட்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.
