சென்னை: சென்னை ஓமந்தூராரில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் பராமரிப்பு பணிக்கான டெண்டர் நடைமுறை தொடர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தள ஆய்வு சான்று வழங்காததால் டெண்டர் நடைமுறைகளுக்கு தடை கோரி இரு ஒப்பந்ததாரர்கள் வழக்கு தொடர்ந்தனர். மனுதாரர்களுக்கு தள ஆய்வு சான்று வழங்கப்பட்டதாக அரசு அளித்த பதிலை ஏற்று உயர்நீதிமன்றம் வழக்கை முடித்துவைத்தது.
