அதைதொடர்ந்து பாலியல் தொழில் செய்த அயனாவரம் சுவாமிநாதன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் (34) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய வடமாநில இளம்பெண்கள் உட்பட 9 பெண்களை போலீசார் மீட்டனர்.பின்னர் பாலியல் புரோக்கரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், மீட்கப்பட்ட 9 பெண்களையும் போலீசார் நீதிமன்ற உத்தரவுப்படி அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஸ்பா மற்றும் சலூன் கடை உரிமையாளரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
The post ஸ்பா சென்டரில் பாலியல் தொழில்: 9 இளம்பெண்கள் மீட்பு appeared first on Dinakaran.
