நாடுகடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கைகளில் விலங்கு போடப்பட்டதா?.. அவர்கள் கால்கள் கயிறால் பிணைக்கப்பட்டதா?: ப.சிதம்பரம் கேள்வி

டெல்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை இந்தியாவுக்கு அமெரிக்க அரசு திரும்ப அனுப்புகிறது. அவர்கள் கைகளில் விலங்கு போடப்பட்டதா? என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவா்களை திருப்பி அனுப்புவதில் அதிபர் டிரம்ப் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக அமெரிக்க ராணுவ விமானம் மூலம் கை, கால்கள் விலங்கிடப்பட்ட நிலையில் 104 இந்தியா்கள் தாய்நாட்டுக்கு அண்மையில் நாடு கடத்தப்பட்டனா். இதன் தொடர்ச்சியாக, 119 இந்தியர்களை நாடுகடத்தும் முயற்சியை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக ப.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது;

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை இந்தியாவுக்கு அமெரிக்க அரசு திரும்ப அனுப்புகிறது

அமெரிக்க விமானம் 119 இந்தியர்களை இன்று கொண்டு வருகிறது

அந்த 119 இந்தியர்களும் கண்ணியத்துடன் நடத்தப்பட்டார்களா என்பதே கேள்வி

அவர்கள் கைகளில் விலங்கு போடப்பட்டதா? அவர்கள் கால்கள் கயிறால் பிணைக்கப்பட்டதா?

இந்திய ராஜதந்திரத்திற்குப் பெரிய சவால்

இந்திய ராஜதந்திரம் வெல்ல வேண்டும், இந்தியர்கள் கண்ணியத்துடன் நடத்தப்படவேண்டும் என்பதே இந்தியர்களின் விருப்பம் என்று கூறியுள்ளார்.

The post நாடுகடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கைகளில் விலங்கு போடப்பட்டதா?.. அவர்கள் கால்கள் கயிறால் பிணைக்கப்பட்டதா?: ப.சிதம்பரம் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: