பிரதமர் மோடியின் அரவணைப்பில் ராஜ்பவனில் அமர்ந்து கொண்டு ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு விரோதமாக, உரிமைகளை பறிக்கின்ற வகையில் செயல்படுகின்ற ஆளுநரின் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன். ஆளுநருக்கு எதிராக நீதிமன்றத்தின் மூலமாக தமிழக உரிமைகளுக்காக போராடி வருகிற தமிழக முதல்வர், ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஆதரவையும், பாராட்டுக்களையும் பெற்று வருகிறார். மாநில உரிமைகளை பாதுகாப்பதில் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருவதை முதல்வர் தனது நடவடிக்கையின் மூலம் நாள்தோறும் உறுதி செய்து வருகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post ஆளுநருக்கு எதிராக நீதிமன்றம் மூலம் போராடும் முதல்வர் மாநில உரிமைகளை பாதுகாப்பதில் இந்தியாவிற்கே தமிழ்நாடு முன்னோடி: செல்வப்பெருந்தகை பெருமிதம் appeared first on Dinakaran.
