முதல்வர் சித்தராமையா மீதான மூடா வழக்கு சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி

பெங்களூரு: மைசூரு மாநகர வளர்ச்சி குழுமத்தின் (மூடா) சார்பில் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு அவர் வழங்கிய நிலத்திற்கு பதிலாக ஒதுக்கீடு செய்த 14 வீட்டுமனைகளில் முறைகேடு நடந்துள்ளதாக சமூக ஆர்வலர் சினேகமயி கிருஷ்ணா புகார் கொடுத்தார். இவ்வழக்கை லோக்ஆயுக்தா விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் மூடா நில முறைகேடு புகாரை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்ககோரி சமூக ஆர்வலர் சினேகமயி கிருஷ்ணா, உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இவ்வழக்கின் தீர்ப்பை நேற்று நீதிபதி எம்.நாகபிரசன்னா வழங்கினார். இதில் முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான மூடா நில முறைகேடு புகாரை சிபிஐ விசாரணைக்கு விட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. இப்புகாரில் லோக்ஆயுக்தா இதுவரை நடத்தியுள்ள விசாரணை தொடர்பான ஆவணங்களை ஆராய்ந்து பார்க்கும்போது, சரியான முறையில் விசாரணை நடத்தி இருப்பது தெரிகிறது என்று கூறி சமூக ஆர்வலர் சினேகமயி கிருஷ்ணா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post முதல்வர் சித்தராமையா மீதான மூடா வழக்கு சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: