அளவர், வரைவாளர் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தகவல்

சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (பட்டயம், தொழிற்பயிற்சி நிலை) தேர்வு பணிகளுக்கான கொள்குறி வகை தேர்வு (ஓம்ஆர் மற்றும் கணினி வழி) 9.11.2024 முற்பகல் நடைபெற்றது. தற்போது தேர்வாணைய பிற்சேர்க்கையின்படி தாள்-2 அளவர் மற்றும் வரைவாளர் (சிவில்) (தொழிற்பயிற்சி தரம்) பாடத்திற்கு கணினி வழி தேர்வு வருகிற 17ம் தேதி முற்பகல் நடைபெற உள்ளது.தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டு (ஹால்டிக்கெட்) தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.inல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கூட நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார்.

The post அளவர், வரைவாளர் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: