* வியாசர்பாடி பி.வி காலனி கரிமேடு 1வது தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (28). இவரது மனைவி நித்யா (24), மகன் ரிஷி (2). தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில் பார்த்திபன் நித்யாவை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த நித்யா நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நித்யாவின் தந்தை ராஜி (56) எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் மருமகன் மீது புகார் அளித்துள்ளார்.
* ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சத்யாநந்த பால் (20). இவர், பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், பத்மநாபா நகர், சம்பந்தனார் தெருவில் உள்ள பழைய துணிகளை வாங்கி விற்கும் கடையில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சத்யாநந்த பால், ஒடிசாவில் உள்ள தனது பெற்றோரிடம் போனில் வாக்குவாதத்தில் ஈடுபட்டவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
The post பெற்றோர் பிரிந்து சென்றதால் தனியாக வசித்து வந்த சிறுவன் தற்கொலை appeared first on Dinakaran.
