இங்கு நவம்பர், டிசம்பர் குளிர்காலத்தில் வெப்பநிலை மிகவும் குறைந்து காணப்படும். மேலும் உறைபனியும் பரவி கிடக்கும். இந்த காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைந்து காணப்படும். எனினும் குளிர் சூழலை ரசிக்க விரும்புவோர் இங்கு வருவார்கள். பின்னர் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பனி மெல்ல மெல்ல குறைய துவங்கும். அப்போது சுற்றுலாப்பயணிகளின் வருகையும் அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கிய பின்னரும் தற்போது வரை கடும் குளிர் நிலவி வருகிறது. இந்த குளிர் சீசன் தொடர்வதால் கொடைக்கானலில் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.
கோடை காலத்தில் இ-பாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியும் கூட்டம் சமாளிக்க முடியாமல் இருந்த நிலையில், குளிர் சீசனில் சுற்றுலாப்பயணிகள் வருகை வழக்கத்தை காட்டிலும் இந்த ஆண்டு குறைவாகவே உள்ளது. இதனால் அனைத்து சுற்றுலா இடங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன. மேலும் தொடர் குளிர் சீசன் காரணமாக கொடைக்கானல் நகரில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய பணிகளும் முடங்கியுள்ளன.
The post கொடைக்கானலில் விடாமல் கொட்டும் பனியால் கடுங்குளிர்: சுற்றுலா தலங்கள் ‘வெறிச்’ appeared first on Dinakaran.
