கும்பமேளாவில் புனித நீராட பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் நேற்று முன்தினம் இந்தியா வந்தார். லக்னோ விமான நிலையம் வந்திறங்கிய ஜிக்மேவுக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் பூடான் மன்னருக்கு பல்வேறு கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் நேற்று புனித நீராடுவதற்காக யோகி ஆதித்ய நாத்துடன் பிரயாக்ராஜ் சென்றார். அங்கு நீராடுவதற்கு முன் அர்க்யா போன்ற சடங்குகளை செய்து வழிபட்டார். பின்னர் மன்னர் ஜிக்மே புனித நீராடினார்.
The post மகாகும்பமேளாவில் புனித நீராடிய பூடான் மன்னர் ஜிக்மே appeared first on Dinakaran.