பெங்களூரு: மாதவிடாய் விடுமுறை என்பது அடிப்படை உரிமை என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாதவிடாய் விடுமுறை பெறுவது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள வாழ்வுரிமையின் ஒரு பகுதி. ஆணும் பெண்ணும் சட்டத்தின் முன் சமம் என்றாலும், அவர்கள் உயிரியல் ரீதியாக வேறுபட்டவர்கள். அதை அங்கீகரிப்பதே சமத்துவத்திற்கு ஒரு முழுமையான அர்த்தத்தைத் தரும் என நீதிபதி கூறினார்.
