இதையடுத்து நெதர்லாந்தில் இருந்து விமானம் மூலம் துபாய் வழியாக, இன்று காலை பிரக்ஞானந்தா சென்னை வந்தார். விமான நிலையத்தில், தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் உறவினர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து நிருபர்களிடம் பிரக்ஞானந்தா கூறுகையில், ‘இந்த தொடரை வென்றது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. கடந்தாண்டு என் ஆட்டம் நன்றாக இல்லை. தற்போது முதல் தொடரில், வெற்றி பெற்றுள்ளேன். இதற்காக நிறைய பயிற்சிகள் எடுத்தேன். நடப்பாண்டில் அதிகப்படியான முக்கிய செஸ் தொடர்கள் நடைபெற உள்ளது. அதனால் நிறைய எதிர்பார்ப்பு உள்ளது.
தற்போது பெற்றுள்ள வெற்றி, மிக முக்கியமான ஒன்றாக பார்க்கிறேன். இந்த தொடரில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் மகிழ்ச்சியாகவே விளையாடினேன். இறுதி போட்டி மட்டும் மிகவும் டென்ஷனாக இருந்தது. எங்களை எதிர்த்து விளையாடிய வீரர்களும் மிக சிறப்பாக விளையாடினார்கள். இறுதி சுற்று டைப் பிரேக்கர் முறையில் நடத்தப்பட்டது. அதில் இருவருமே தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்தான். இதில் யார் வெற்றி பெற்றிருந்தாலும் நமக்குதான் அந்த பட்டம் கிடைத்திருக்கும். இது மிகவும் பெருமைக்குரிய ஒன்று’ என்றார்.
The post சர்வதேச செஸ் போட்டியில் குகேஷை வீழ்த்திய பிரக்ஞானந்தாவுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.
