இந்நிலையில், மீண்டும் சென்னை, திருவாரூர் உள்ளிட்ட 6க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டது தொடர்பாக மன்னார்குடி ஆசாத் தெருவில் உள்ள பாவா பக்ருதீன் (47) வீட்டுக்கு நேற்று அதிகாலை 6 மணியளவில் சென்னையில் இருந்து இன்ஸ்பெக்டர் அருண் மகேஷ் தலைமையிலான என்ஐஏ அதிகாரிகள் 4பேர் ஒரு காரில் வந்தனர்.
அவர்கள் வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். 4 மணி நேரம் சோதனை நடந்தது. இதில் ஒரு செல்போன் மற்றும் பென்டிரைவ் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, அடுத்த கட்ட விசாரணைக்காக பாவாபக்ருதீனை என்ஐஏ அதிகாரிகள் சென்னைக்கு அழைத்துசென்றனர்.
The post மன்னார்குடியில் என்ஐஏ சோதனை: ஒருவரை சென்னை அழைத்து சென்று விசாரணை appeared first on Dinakaran.
