திருத்தணி பள்ளியில் உணவுத் திருவிழா

திருத்தணி: திருத்தணியில் உள்ள, தனியார் பள்ளியில் உணவுத் திருவிழா பள்ளியின் தாளாளர் பிரான்சிஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. விழாவில், வட்டார கல்வி அலுவலர் மேரிஜோஸ்பின் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்தார். இதில், பள்ளி மாணவர்கள் பல்வேறு வகையான உணவுப் பொருட்களை பள்ளிக்கு கொண்டு வந்தனர்.

பாரம்பரிய உணவுகளான கருப்புகவுனி, திணை, சாமை, வரகு, ராகி, கம்பு, கேழ்வரகு, சோளம், கொண்டைக்கடலை, தட்டைப் பயிறு பாசிப்பருப்பு போன்ற சிறு தானிய உணவுகள், பழங்கள், கீரைகள், காய்கறிகள் போன்ற உடலுக்கு நன்மை தரும் உணவுகள் மற்றும் உடலுக்கு தீமை தரும் துரித உணவுகள் நூடுல்ஸ், மைதா பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டது.

மாணவ, மாணவிகள் கண்காட்சியில் வைக்கப்பட்ட உணவுகளை ஆர்வமுடன் சுவைத்து, அதன் பயன்களை அறிந்து விழிப்புணர்வு பெற்றனர். சிறுதானியம் மற்றும் இயற்கை உணவுகளை உட்கொள்வதால் பெறும் உடல் ஆரோக்கியம் குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விளக்கினர்.

The post திருத்தணி பள்ளியில் உணவுத் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: