ரயில்வே சுரங்கப்பாதையில் சகதியாக மாறிய சாலை

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம், மாணிக்கம் நகரில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப் பாதையின் சாலை பழுதடைந்து கடந்த பல மாதங்களாக குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுகின்றனர். குறிப்பாக, சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவ, மாணவியர் கீழே விழுந்து காயமடைகின்றனர்.

மேலும், சாலை பள்ளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால், சகதியாக மாறி வாகனங்கள் செல்லும்போது சகதி நீர் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆடைகளில் தெறித்து சிரமப்படுகின்றனர். எனவே இந்த சுரங்கப்பாதை சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ரயில்வே சுரங்கப்பாதையில் சகதியாக மாறிய சாலை appeared first on Dinakaran.

Related Stories: