நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய கார் மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதி 5 பேர் படுகாயம்: ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் இறந்து கிடந்த மாட்டின் மீது மோதி விபத்தில் சிக்கிய காரின் மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 5 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி கார் ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தது.

அப்போது, பென்னலூர் பகுதியில் சென்றபோது, சாலையில் இறந்து கிடந்த மாட்டின் மீது எதிர்பாராத விதமாக மோதியதில், கட்டுப்பாட்டை இழந்து கார் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. காலையில் விபத்து நடந்ததால், கடும் பனிப்பொழிவு காரணமாக, விபத்தில் சிக்கிய கார் இருப்பது தெரியாமல், பின்னால் வந்த 2 தனியார் தொழிற்சாலை பேருந்துகள், காலி மது பாட்டில்களை ஏற்றிவந்த லாரி என அடுத்தடுத்து 4 வாகனங்களும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் சென்றவர்கள், பேருந்தில் பயணம் செய்தவர்கள் என 5க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடும் நெரில் ஏற்பட்டது.

The post நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய கார் மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதி 5 பேர் படுகாயம்: ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: